புதன், 29 ஏப்ரல், 2009

T20 இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமா? சச்சின் கேள்வி

அதிவேக கிரிக்கெட் வடிவமாகிய இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டம் இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமே என்று கூறுபவரகளுக்கு கிரிக்கெட்டை அதிகம் தெரியாது என்று தான் கருதுவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் இது பற்றி விலாவாரியாக பேசியுள்ளார்."இது இளைஞர்களுக்கான கிரிக்கெட் என்று யார் கூறினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இது போன்று கூறுபவருக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியவில்லை என்பது தெளிவு. இது கிரிக்கெட் வீரர்களுக்கான ஆட்டம் எனவே இதில் இளைஞர், முதியவர் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது" என்று அனல் கக்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.தனது 36-வது பிறந்த நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய சச்சின் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஃபார்மில் உள்ளார் இதுவரை 163 ரன்களை 80 ரன்கள் என்ற சராசரியில் குவித்துள்ளார் சச்சின்.

கருத்துகள் இல்லை: