சனி, 21 மார்ச், 2009

இந்தியா - நியுசிலாந்து - டெஸ்ட் போட்டி


















ஹாமில்டன்:தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர் கிறது। ஹாமில்டன் டெஸ்டில் ஹர்பஜன் 6 விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது। இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது।நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது। முதல் போட்டி ஹாமில்டனில் நடந்தது। முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 279, இந்தியா 520 ரன்கள் எடுத்தன। 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது। ஹர்பஜன் அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது। முன்னணி வீரர் ரோஸ் டெய்லர் (4) சோபிக்க தவறினார்। அதிரடி ரைடர்(21) இம்முறை ஹர்பஜன் சுழலில் சிக்கினார்। அடுத்து வந்த பிராங்க்ளினும் (14) நியூசிலாந்துக்கு கைகொடுக்கவில்லை. ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக ஆடிய பிளின், டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். மெக்கலம் ஆறுதல்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, ஹர்பஜன் தொடர்ந்து பந்து வீச்சில் மிரட்டி னார். இவரது சுழலில் நியூசிலாந்து நிலை குலைந்தது. 10 பவுண்டரி களுடன் 67 ரன்கள் சேர்த்த பிளின், இவரிடம் விக்கெட்டை பறிகொடுத் தார். "மிடில் ஆர்டர்' வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மெக்கலம் தனி ஆளாகப் போராடி னார். வெட்டோரி (21), ஓ பிரையன் (14) ஓரளவு தாக்குப் பிடிக்க, மெக்கலம் டெஸ்ட் அரங்கில் 13 வது அரை சதம் கடந்தார். இவர் 84 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி இரண் டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவுக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எளிய வெற்றி: எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர், டிராவிட் அதிரடி துவக்கம் தந்தனர். 5.2 ஓவர்களில் 39 ரன்கள் குவித்த இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பிர் (30), டிராவிட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சச்சின் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 26 ம் தேதி நேப்பியரில் துவங்குகிறது. சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன்:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" 33 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். சச்சின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி எனது முடிவை உறுதி படுத்தினர். அடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். சச்சினுடன் இணைந்து விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் நன்றாக விளையாடா விட்டாலும், விளையாடி னாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவர் அளிக்கும் ஆலோச னைகள் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனது தலைமையில் சிறப்பான அணி அமைந்திருக்கிறது. அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்ந்து ஆடி வருகின் றனர். தொடரை வெல்லும் பட்சத்தில், சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,'' என்றார். கவாஸ்கருக்கு பின்ஹாமில்டன் டெஸ்டின் வெற்றியின் மூலம், 33 ஆண்டு களுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் அசத்தியுள்ளது இந்திய அணி. கடந்த 1976 ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த போட்டியில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதற்கடுத்து 33 ஆண்டுகளுக்குப் பின் தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது தான் நியூசிலாந்தில் வெற்றிக் கனியை எட்டிப் பறித்துள்ளது. 99 வது வெற்றி * ஹாமில்டன் வெற்றி, டெஸ்ட் அரங்கில் இந்தியா பெறும் 99 வது வெற்றி. இதுவரை 428 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி, இந்த இலக்கை எட்டி உள்ளது. * நியூசிலாந்து மண்ணில் இந்தியா விளையாடியுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில், 5 வது வெற்றி இது. * நேற்று 10 விக்கெட் வித்தி யாசத்தில் பெற்ற வெற்றியே, ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் சிறப்பான வெற்றியாகும். இதுவரை 4 டெஸ்டில் நியூசிலாந்துடன் இந்தியா இங்கு மோதியுள்ளது. இதில், கடந்த 2002-03 ம் ஆண்டு நடந்த போட்டியில், நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. மற்ற இரண்டு போட்டிகள் "டிராவில்' முடிந்தன. 12 வது முறை * டெஸ்ட் அரங்கில் ஆட்ட நாயகன் விருதை 12 வது முறையாக கைப்பற்றினார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். தவிர, நியூசிலாந்துக்கு எதிராக இது 3 வது முறை (1995, சென்னை டெஸ்ட்), (1999, ஆமதாபாத்). * சச்சின் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பின், இந்திய அணி வெற்றி பெற்ற 51 போட்டிகளில், சச்சினின் 16 சதமும் அடங்கும். சூப்பர் ஜோடி:இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியை நேற்று பறித்தது, நியூசிலாந்தின் மெக்கலம், ஓ பிரையன் ஜோடி. 9 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. இந்த ஜோடியை விரைவில் வெளியேற்றி இருந்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். சபாஷ் தோனி:இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிக் கிறார் தோனி. இவரது தலைமையில் விளையாடிய 6 டெஸ்டில் 5 ல் வெற்றி, ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தினார். தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.









ஞாயிறு, 8 மார்ச், 2009

சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது











சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது। நியூசிலாந்து சென்றுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. "டாஸ்" வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. மீதமுள்ள போட்டிகளில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனால் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (163), யுவராஜ் சிங் (87), கேப்டன் தோனி (68), சுரேஷ் ரெய்னா (38) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்" பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இது ஒருநாள் அரங்கில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த 2007ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது. தவிர நியூசிலாந்து மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இப்போட்டியில் சதம் கடந்த சச்சின் ஒருநாள் அரங்கில் அதிக சதம் (43வது) கடந்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை 425 போட்டிகளில் பங்கேற்ற இவர் 43 சதம், 91 அரைசதம் உட்பட 16684 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்னர் கடின இலங்கை விரட்டிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜெசி ரைடர் (105), பிரண்டன் மெக்கலம் (71), கைல் மில்ஸ் (54), டிம் சவுத்தி (32) ஓரளவு நம்பிக்கை தந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான், யுவராஜ், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 11ம் தேதி நடக்கிறது


























புதன், 4 மார்ச், 2009

இந்தியா, நியூஸீலாந்த் - மார்ச் - 3 - 2009













நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்து அணியை அபாரமாக தலைமையேற்று நடத்திய தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.டக்வொர்த் முறைப்படி 38 ஓவர்களில் 278 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நியூஸீலாந்து ஓவருக்கு 9.42 ரன்கள் தேவை என்ற நிலையில் 111/4 என்று இருந்த போது மீண்டும் மழை பெய்தது. ஆட்டம் துவங்கும் போது 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 216 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 42 பந்துகளில் சுமார் 112 ரன்களை அடிக்குமாறு டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூஸீலாந்து கடைசியில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.நியூஸீ. அணியில் குப்டில் மட்டுமே சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 5 பவுண்டரிஅக்ளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நியூஸீலாந்து பேட்ஸ்மென்களால் இன்று ஒரு சிக்சரைக் கூட அடிக்க முடியவில்லை.துவக்கத்தில் பிரவீண் குமார் தனது சாதுரியமான பந்து வீச்சினால் மெக்கல்லம், மற்றும் ரைடரை வீழ்த்தினார். மேலும் ஜாகீர் கான் ஒரு முனையில் இறுக்கினார். இதனால் ரன் எடுப்பது நியூஸீலாந்து அணிக்கு துவக்கம் முதலே பிரச்சனையாக இருந்தது.ஆனால் டெய்லரும், குப்டில் அடுத்த 8 ஓவர்களில் 58 ரன்களை விளாசினர். அப்போது 31 ரன்கள் எடுத்திருந்த டெய்லர், யூசுஃப் பத்தான் பந்தில் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.81/3 என்ற ஸ்கோரிலிருந்து கிராண்ட் எலியட்டும், குப்டிலும் ஸ்கோரை 111 ரன்களுக்கு உயர்த்திய போது எலியட் சேவாகின் அபாரமான த்ரோவிற்கு ரன் அவுட் ஆனார்.அப்போது மழை பிடிக்க துவங்கியது. மீண்டும் வந்த போது இமாலய இலக்கௌ நிர்ணயிக்கப்பட்டது.இதில் வரிசையாக 5 விக்கெட்டுகளை இழந்தனர் நியூஸீலாந்து வீரர்கள்.ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீண் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாகீர் கான், யுவ்ராஜ், யூசுஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.