ஞாயிறு, 6 டிசம்பர், 2009

முதல் முறையாக "நம்பர்-1' இடம்





மும்பை: மும்பை டெஸ்டில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர தனது டெஸ்ட் வரலாற்றில் 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆட்ட, தொடர் நாயகன் என விருதுகளையும் சேவக் வென்றார்.


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது.


பின்னர் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர 1932ல் டெஸ்ட் விளையாட துவங்கிய இந்திய அணி, 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடம் பெற்றது. தற்போது இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.
இப்போட்டியில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
---------------------
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
--------
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
--------
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

india vs new zealand
















11/09/2009

கொழும்பு:நெஹ்ரா, யுவராஜ் பந்து வீச்சில் அசத்த, இந்திய அணி நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முத்தரப்பு தொடரின் பைனலுக்கு சூப்பராக முன்னேறியது. பைனலில் இலங்கை அணியை சந்திக்கிறது. அடுத்தடுத்து இரண்டு லீக் போட்டி களில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து பரிதாப மாக வெளியேறியது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் இரண்டாவது லீக் போட்டி யில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர் கொண்டது. முன்னதாக முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்திருந்த நியூசி லாந்து அணி, கட்டாய வெற்றியை எதிர் நோக்கி களமிறங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார்.

மிரட்டல் வேகம்:மெக்கலம், ரைடர் நியூசி லாந்து அணிக்கு துவக்கம் தந்தனர். நெஹ்ரா வேகத்தில் அனல் பறந்தது. ரைடர் டக் அவுட்டானார். மெக்கலம் (3) ஏமாற்ற, துவக்கத்திலேயே தடுமாறியது நியூசிலாந்து. டெய்லர் (11) ஏமாற்றி னார்.

யுவராஜ் அசத்தல்:பின்னர் சுழலில் மிரட்டிய யுவராஜ், கப்டில் (22), எலியட் (22) இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக் கினார். மிடில் ஆர்டரில் ஆல்-ரவுண்டர் ஓரம் (24), புரூம் (21) நம்பிக்கை அளிக்க தவறினர். வெட்டோரி (25) ஆறுதல் அளித்தார். டெயிலெண்டர் களான மில்ஸ் (6), பட்லர் (6) சொற்ப ரன்களில் அவுட்டாக, 46.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

சச்சின் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்க வீரர் தினேஷ் கார்த்திக் (4) விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் சச்சின், டிராவிட் ஜோடி சேர்ந் தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தது. சச்சின் அதிரடி காட்ட, டிராவிட் படுமந்தமாக ஆடினார். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (14) அவுட்டானார். மறுமுனை யில் 6 பவுண்டரிகளை விளாசிய சச்சின் (46) அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
சூப்பர் ஜோடி: அடுத்து வந்த யுவராஜ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற் றினார். பின்னர் வந்த ரெய்னா, சூப்பர் சிக்சர் அடித்து தனது ஆட்டத்தை துவக்கினார். இவருடன் இணைந்த கேப்டன் தோனி சிறப்பாக ஆடி னார். இவர்களது பொறுப் பான ஆட்டம் கை கொடுக்க, இந்திய அணி 40.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . தோனி(35), ரெய்னா (45) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை நெஹ்ரா வென்றார்.

பைனல் வாய்ப்பு: முத்தரப்பு தொடரின், முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, நேற்றும் ஏமாற்றியதால் பைனல் வாய்ப்பை இழந்தது. ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கையுடன் வரும் 14 ம் தேதி பைனலில் மோத உள்ளது. இதனால் இன்று நடக்கும் இலங்கை, இந்தியா இடையிலான லீக் போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

நெஹ்ரா "100':நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் மெக்கலமை அவுட்டாக்கிய ஆசிஷ் நெஹ்ரா, ஒரு நாள் அரங்கில் 100 வது விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதுவரை 77 போட்டிகளில் இவர் 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, இந்த இலக்கை எட்டும் 13 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் நெஹ்ரா. * இந்திய துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்கை நேற்று அவுட் செய்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்ஸ், ஒரு நாள் அரங்கில் 150 வது விக்கெட்டை கைப்பற்றினார்.

29,500 ரன் நியூசிலாந்துக்கு :எதிரான நேற்றைய போட்டியில், 43 ரன்கள் எடுத்த போது சச்சின் புதிய மைல் கல்லை எட்டினார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டிலும் சேர்த்து 29,500 ரன்கள் குவித்தார். இதுவரை டெஸ்டில் 12773, ஒரு நாள் அரங்கில் 16730 ரன்கள் குவித்துள்ளார் சச்சின்.

சனி, 2 மே, 2009

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் , பஞ்சாப் அணி

கும்ளே அணி வெற்றி:
யுவராஜ் "ஹாட்ரிக்' வீண்

நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரை கலக்கலாக வீசிய பிரவீண் குமார் வெற்றிக்கு வித்திட்டார். பஞ்சாப் சார்பில் கேப்டன்யுவராஜின் "ஹாட்ரிக்' சாதனை, அதிரடி அரைசதம் வீணானது.தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

நேற்று இரவு டர்பனில் நடந்த 24வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சால ஞ்ர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பேட்டிங் தேர்வு செய்தார்.துவக்கம் மோசம்: பெங்களூரு அணி மோசமான துவக்கம் கண்டது. இர்பான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே ஜெசி ரைடர்(2) அவுட்டானார். யுவராஜ் அபாரம்: இதற்கு பின் யுவராஜ் அசத்தினார். 12வது ஓவரின் 5வது பந்தில் உத்தப்பாவை(19)வெளியேற்றினார். 6வது பந்தில் காலிஸ்(27) போல்டானார். இவரது அடுத்த ஓவரின்(14வது) முதல் பந்தில் அனுபவ பவுச்சர்(2) எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வாண்டர் மெர்வி 35 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

அதிரடி அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் யுவராஜ், கோயல் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். வழக்கம் போல சிக்சர் மழை பொழிந்த யுவராஜ் 50 ரன்களுக்கு(3 பவுண்டரி, 4 சிக்சர்) கும்ளே சுழலில் அவுட்டானார். கோயல் 20 ரன்கள் எடுத்தார். கேடிச்(3), ஜெயவர்தனா(19), சங்ககரா(17) அதிக நேரம் நீடிக்கவில்லை.6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. பிரவீண் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் இர்பான் பதான் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் ரன் இல்லை.நான்காவது பந்தில் இர்பான்(12) அவுட் டானார். ஐந்தாவது பந்தில் சாவ்லா(3)போல்டானார். 6வது பந்தில் ரன் எடுக்க இயலவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. புதிய கேப்டன் கும்ளே, பெங்களூரு அணிக்கு வெற்றிப் பாதையை காட்டியுள்ளார். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , மும்பை இந்தியன்ஸ்






ஐபிஎல் கிரிக்கெட்:
மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில், சச்சின் தெண்டுல்கர் 34 ரன்களும் ஹர்பஜன் சிங் 6 ரன்களும் எடுத்தனர். டூமினி 52 ரன்களுடனும் ஜாகீர்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹோட்கே 78 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு பலம் சேர்த்தார். எனினும், 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனக்டு இரண்டாவது வெற்றியை ஈட்டியது. தமிழக வீரர் பாலாஜி சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஸ்மித் 2 ரன்னில் (5 பந்து) ஆட்டம் இழந்ததும், சென்னை அணியின் உற்சாகம் ஆரம்பமானது. அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் சென்னை வீரர்கள் வீழ்த்திய வண்ணம் இருந்தனர். அந்த அணியின் அதிரடி மன்னன் யூசுப் பதான், சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்பட்டது. அவரை 20 ரன்களில் (13 பந்து, 3 பவுண்டரி) பாலாஜி வெளியேற்றினார். அவர் ஆட்டம் இழந்ததும் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிகட்டத்தில் சென்னை பவுலர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.முடிவில் 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 126 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் கம்ரன்கான் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 37 ரன்னும், குவீனி 28 ரன்னும் எடுத்தனர்.சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் பாலாஜி 4 விக்கெட்டுகளும், அல்பி மோர்கல், ஓரம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

புதன், 29 ஏப்ரல், 2009

T20 இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமா? சச்சின் கேள்வி

அதிவேக கிரிக்கெட் வடிவமாகிய இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டம் இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமே என்று கூறுபவரகளுக்கு கிரிக்கெட்டை அதிகம் தெரியாது என்று தான் கருதுவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் இது பற்றி விலாவாரியாக பேசியுள்ளார்."இது இளைஞர்களுக்கான கிரிக்கெட் என்று யார் கூறினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இது போன்று கூறுபவருக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியவில்லை என்பது தெளிவு. இது கிரிக்கெட் வீரர்களுக்கான ஆட்டம் எனவே இதில் இளைஞர், முதியவர் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது" என்று அனல் கக்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.தனது 36-வது பிறந்த நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய சச்சின் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஃபார்மில் உள்ளார் இதுவரை 163 ரன்களை 80 ரன்கள் என்ற சராசரியில் குவித்துள்ளார் சச்சின்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்








கொல்கத்தா மீண்டும் தோல்வி
டர்பனில் நடைபெர்ற்ற ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த 139 ரனகள் இலக்கை எதிர்த்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் வான் விக் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.முதல் ஓவரை கெவின் பீட்டர்சன் வீசியது ஆச்சரியம் என்றால் அவர் வீசிய சாதாரண வெளுத்துக் கட்ட வேண்டிய பந்தை அதிரடி மன்னன் பிரண்டன் மெக்கல்லம் நேராக பாயிண்ட் ஃபீல்டர் கையில் கேட்ச் கொடுத்தது அதைவிட அதிசயமாக இருந்தது.அதன் பிறகு கிறிஸ் கெய்ல், பிராட் ஹாட்ஜ் அதிரடி ஆட்டம் ஆடினர். 35 பந்துகளில் இருவரும் 45 ரனகளை சேர்த்தனர். அப்போது பிராட் ஹாட்ஜ் 17 ரன்கள் எடுத்து கும்ளேயிடம் வீழ்ந்தார்.கங்கூலி 8 பந்துகள் திணறொ திணறென்று திணறி 1 ரன் எடுத்து தனக்கு வராத புல் ஷாட்டை ஆடி கேட்ச் கொடுத்தார்.கிறிஸ் கெய்ல் 37 பந்துகளில் 40 ரனகள் எடுத்து ஆட்டமிழந்தபோது 12வது ஓவரில் 70/4 4என்று ஆனது கொல்கத்தா அணி. அதன் பிறகு வான் விக்கும், சாஹாவும் அணியின் எண்ணிக்கையை மெல்ல 110 ரன்களுக்கு உயர்த்தினர். சஹா ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்ததாக சுக்லாவும் ஆட்டமிழந்தார். கொல்கட்டா அணி 20 ஓவர்களில் 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் பீட்டர்சன் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மீண்டும் அனில் கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.தனது இனிங்ஸை தொடங்கியா பெங்களூர் ராயல் சலஞ்சஸ் அணியின் துவக்க வீரர் எஸ்.பி.கோஸ்வாமி 43 ரன்களை குவித்தார். காலிஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 11 ஓவர்களில் 69 ரன்களைச் சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.கெவின் பீட்டர்சன் 13 ரன்களையும் வீரத் கோலி 19 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தபோது 16 ஓவர்களில் 107/4 என்று சற்றே பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது. பிராட் ஹாட்ஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதன் பிறகு ஆட்டம் நெருக்கமாக சென்றது. 19-வது ஓவரில் 130/5 என்று இருந்தது. பீட்டர்சன் ஆட்டமிழந்த பிறகு மார்க் பவுச்சரும் வான் டெர் மெர்வும் 17 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தனர்.அப்போது 9 ரன்கள் எடுத்த மெர்வ் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தோன்றியது. இந்த நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் கடைசி ஓவரை கெய்ல் வீசினார். பௌச்சர் 2 பவுண்டரிகளை விளாசி வெற்றி பெற வைத்தார். பௌச்சர் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்தார்.இதன் மூலம் பெங்களூர் அணி இந்த ஐ.பி.எல்-இல் 2-வது வெற்றியை ஈட்டியுள்ளது. இஷாந்த் ஷர்மா சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக பௌச்சர் தேர்வு செய்யப்பட்டார்.



மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்








பஞ்சாப் அணி 3 ரன்னில் வெற்றி
ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி வாய்ப்பை வீணாக்கியது.






தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டர்பனில் நேற்று இரவு நடந்த 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.






துவக்கம் மோசம்: பஞ்சாப் அணி திணறல் துவக்கம் கண்டது. கோயல் (12), போபரா(6) விரைவில் வெளியேறினர். கேப்டன் யுவராஜ்(10) மீண்டும் ஏமாற்றினார். ஜெயசூர்யா சுழலில் ஜெயவர்தனா(7) சிக்க, 4 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து தத்தளித்தது. உறுதியாக போராடிய சங்ககரா அணியை மீட்டார். கடைசி கட்டத்தில் ஜாகிர், மலிங்கா விக்கெட் வீழ்த்தியதோடு ரன்களையும் விட் டுக் கொடுக்கவில்லை. இதனால் ரன் விகிதம் குறைந்து போனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டும் எடுத்தது. சங்ககரா(45) அவுட்டாகாமல் இருந்தார்.






சச்சின் ஏமாற்றம்: போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி படுமோசமான துவக்கம் கண்டது. இர்பான் வீசிய முதல் பந்திலேயே ஜெயசூர்யா(0) அவுட்டானார். மாலிக் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் சச்சின்(1) வெளியேறினார். தவான் (3), பிராவோ(15) ஏமாற்ற, 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதற்கு பின் டுமினி, அபிஷேக் நாயர் இணைந்து போராடினர். நாயர் 15 ரன்கள் எடுத்தார். டுமினி அரைசதம் கடந்தார்.6 பந்தில் 12 ரன்: கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் மும்பை அணி வெற்றி என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.அப்துல்லா அற்புதமாக பந்துவீசினார். முதல் 3 பந்தில் 5 ரன்கள் எடுக்கப் பட்டது. 4வது பந்தில் டுமினி 59 ரன்களுக்கு அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சங்ககரா தேர்வு



செய்யப்பட்டார்

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

டெல்லி , ராஜஸ்தான் ஏப்ரல் 28

யூசுப் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான்அதிரடியாக அரைசதம் கடக்க, நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.தென் ஆப்ரிக்காவில் 2வது ஐ.பி.எல்.,”டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

நேற்று நடந்த 18 வது லீக் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டில்லி அணி, பேட்டிங் தேர்வு செய்தது.டிவிலியர்ஸ் அரை சதம்: டில்லி அணிக்கு துவக் கத்தில் காம்பிர் (8), சேவக் (16) ஏமாற்றினர். அடுத்து வந்த டிவிலியர்ஸ் பொறுப் புடன் ஆடினார்.
ஆனால் இவருக்கு மிடில் ஆர்டர் வீரர்களான தில்ஷன் (7), தினேஷ் கார்த்திக் (4)ஒத்துழைப்பு தரவில்லை. 1 சிக்சர் 5 பவுண்டரி உட்பட அரை சதம் பதிவு செய்த டிவிலியர்ஸ் (50) ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெட்டோரி (29), மன்காஸ் (23*) ஆறுதல் அளிக்க, டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
மிஸ்ரா மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, குய்னே (4) விக்கெட்டை விரைவில் இழந்தது.
சுழற் பந்து வீச்சில் மிரட்டிய டில்லி வீரர் அமித் மிஸ்ரா, பால் வால்தட்டி (1), ரவீந்திர ஜடேஜா (16), வார்ன் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
பதான் வாணவேடிக்கை: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பார்முக்கு திரும்பிய ஸ்மித் பொறுப்புடன் ஆடினார்.
இவருடன் இணைந்த யூசுப் பதான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சிக்சர்களாக விளாசித் தள்ளிய யூசுப் வெற்றிநாயகனாக ஜொலித்தார்.
ராஜஸ்தான் அணி 18.3ஓவரில் 147 ரன்கள் அடித்து வெற்றியை எட்டியது. ஸ்மித் 44, யூசுப் பதான் 62 ரன்களுடன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். யூசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சென்னை , டெக்கான் ஏப்ரல் 27

சென்னையை வெ‌ன்றது டெக்கான்

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.

பூவா-தலையா வென்ற டெக்கான் அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் இழ‌ப்‌பி‌ற்கு 165 ரன்களை எடுத்தது. ஹெ‌ய்ட‌ன் 49 ர‌ன்களு‌ம், மா‌ர்‌க்கெ‌ல் 41 ர‌ன்களு‌ம் எடு‌த்தன‌ர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் கில்கிறிஸ்டும், கிப்ஸும் சிறப்பாகத் துவக்கினர். கில்கிறிஸ்ட் 19 பந்துகளில் 5 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றாடிய கிப்ஸ் இறுதி வரை நின்றாடி 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து டெக்கான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெர்ஷல் கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்": சச்சின்



இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்":சச்சின்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36-வது பிறந்த நாள். இதனையொட்டி அவர் தந்து அணியான மும்பை இந்தியன்ச் அணியின் சக வீரர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலையேற்று நடத்தி வரும் சச்சின் 36-வது பிறந்த நாளைப் பற்றி குறிப்பிடுகையில் "இன்னமும் 16 வயது போல்தான் உணர்கின்றேன்" என்றார்.தனது இத்தனையாண்டுகால கிரிக்கெட் வாழ்வு பற்றி அவர் கூறுகையில் "சாதனைகளை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல, கிரிக்கெட் போட்டிகளை வெல்வதே மகிழ்ச்சியான விஷயம், வெற்றி தரும் உணர்வே அலாதியானது" என்றார்.புள்ளி விரங்களைப் பார்க்கும்போது ஒரு நாள் போட்டிகளில் 16,000 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் சுமார் 12,000 ரன்களையும் குவித்துள்ளார் சச்சின் ஆனால் அது பற்றி அவர் பெரிதாக கூறவில்லை மாறாக, "புள்ளிவிவரங்கள் என்பது ஒரு தனிப்பட்ட வீரர் தன் அணிக்கு செய்த பங்களிப்பையே குறிக்கிறது, தனி நபர் சாதனை ஒரு விஷயமாக இருப்பினும் வெற்றிபெறுவதே முக்கியம்" என்று கூறினார் சச்சின்.பிறந்த நாள் கொண்டாட்டங்களில் டெண்டுல்கரின் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்.

மும்பை கொல்கட்டா ஏப்ரல் 27












மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டெண்டுல்கர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யா, டெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எதிரணி பந்து வீச்சை இருவரும் விளாசி தள்ளினார்கள். இதனால் ரன் விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.5.5 ஓவர்களில் 50 ரன்னை தொட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. டெண்டுல்கர் 34 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 127 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. டெண்டுல்கர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.டெண்டுல்கர் களத்தில் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்னுக்கு மேல் குவித்து சாதனை படைக்கும் என்ற நிலையில் இருந்தது ஆனால் அதன் பிறகு மும்பை அணி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன்சிங் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 32 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுக்லா பந்துவீச்சில் அரிந்தம் கோஷிடம் கேட்ச் கொடுத்து பெலிவியன் திரும்பினார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. டுமினி 18 ரன்னுடனும், திவாரி 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அபிஷேக் நாயர் 3 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும், ஷிகர் தவான் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுக்லா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 15.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொல்கத்தா அணியில் கேப்டன் மெக்கல்லம் 1 ரன்னிலும், கெய்ல் 12 ரன்னிலும், ஹாட்ஜ் 24 ரன்னிலும், கங்குலி 34 ரன்னிலும், அரிந்தன் ஜோஷ் ரன் எதுவும் எடுக்காமலும், யஷ்பால்சிங் 8 ரன்னிலும், சுக்லா 6 ரன்னிலும், மென்டிஸ், திண்டா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபிஷேக் நாயர், மலிங்கா தலா 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டெண்டுல்கருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.இந்த போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வியாகும்.

சனி, 21 மார்ச், 2009

இந்தியா - நியுசிலாந்து - டெஸ்ட் போட்டி


















ஹாமில்டன்:தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர் கிறது। ஹாமில்டன் டெஸ்டில் ஹர்பஜன் 6 விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது। இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது।நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது। முதல் போட்டி ஹாமில்டனில் நடந்தது। முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 279, இந்தியா 520 ரன்கள் எடுத்தன। 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது। ஹர்பஜன் அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது। முன்னணி வீரர் ரோஸ் டெய்லர் (4) சோபிக்க தவறினார்। அதிரடி ரைடர்(21) இம்முறை ஹர்பஜன் சுழலில் சிக்கினார்। அடுத்து வந்த பிராங்க்ளினும் (14) நியூசிலாந்துக்கு கைகொடுக்கவில்லை. ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக ஆடிய பிளின், டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். மெக்கலம் ஆறுதல்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, ஹர்பஜன் தொடர்ந்து பந்து வீச்சில் மிரட்டி னார். இவரது சுழலில் நியூசிலாந்து நிலை குலைந்தது. 10 பவுண்டரி களுடன் 67 ரன்கள் சேர்த்த பிளின், இவரிடம் விக்கெட்டை பறிகொடுத் தார். "மிடில் ஆர்டர்' வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மெக்கலம் தனி ஆளாகப் போராடி னார். வெட்டோரி (21), ஓ பிரையன் (14) ஓரளவு தாக்குப் பிடிக்க, மெக்கலம் டெஸ்ட் அரங்கில் 13 வது அரை சதம் கடந்தார். இவர் 84 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி இரண் டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவுக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எளிய வெற்றி: எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர், டிராவிட் அதிரடி துவக்கம் தந்தனர். 5.2 ஓவர்களில் 39 ரன்கள் குவித்த இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பிர் (30), டிராவிட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சச்சின் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 26 ம் தேதி நேப்பியரில் துவங்குகிறது. சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன்:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" 33 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். சச்சின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி எனது முடிவை உறுதி படுத்தினர். அடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். சச்சினுடன் இணைந்து விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் நன்றாக விளையாடா விட்டாலும், விளையாடி னாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவர் அளிக்கும் ஆலோச னைகள் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனது தலைமையில் சிறப்பான அணி அமைந்திருக்கிறது. அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்ந்து ஆடி வருகின் றனர். தொடரை வெல்லும் பட்சத்தில், சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,'' என்றார். கவாஸ்கருக்கு பின்ஹாமில்டன் டெஸ்டின் வெற்றியின் மூலம், 33 ஆண்டு களுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் அசத்தியுள்ளது இந்திய அணி. கடந்த 1976 ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த போட்டியில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதற்கடுத்து 33 ஆண்டுகளுக்குப் பின் தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது தான் நியூசிலாந்தில் வெற்றிக் கனியை எட்டிப் பறித்துள்ளது. 99 வது வெற்றி * ஹாமில்டன் வெற்றி, டெஸ்ட் அரங்கில் இந்தியா பெறும் 99 வது வெற்றி. இதுவரை 428 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி, இந்த இலக்கை எட்டி உள்ளது. * நியூசிலாந்து மண்ணில் இந்தியா விளையாடியுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில், 5 வது வெற்றி இது. * நேற்று 10 விக்கெட் வித்தி யாசத்தில் பெற்ற வெற்றியே, ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் சிறப்பான வெற்றியாகும். இதுவரை 4 டெஸ்டில் நியூசிலாந்துடன் இந்தியா இங்கு மோதியுள்ளது. இதில், கடந்த 2002-03 ம் ஆண்டு நடந்த போட்டியில், நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. மற்ற இரண்டு போட்டிகள் "டிராவில்' முடிந்தன. 12 வது முறை * டெஸ்ட் அரங்கில் ஆட்ட நாயகன் விருதை 12 வது முறையாக கைப்பற்றினார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். தவிர, நியூசிலாந்துக்கு எதிராக இது 3 வது முறை (1995, சென்னை டெஸ்ட்), (1999, ஆமதாபாத்). * சச்சின் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பின், இந்திய அணி வெற்றி பெற்ற 51 போட்டிகளில், சச்சினின் 16 சதமும் அடங்கும். சூப்பர் ஜோடி:இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியை நேற்று பறித்தது, நியூசிலாந்தின் மெக்கலம், ஓ பிரையன் ஜோடி. 9 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. இந்த ஜோடியை விரைவில் வெளியேற்றி இருந்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். சபாஷ் தோனி:இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிக் கிறார் தோனி. இவரது தலைமையில் விளையாடிய 6 டெஸ்டில் 5 ல் வெற்றி, ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தினார். தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.









ஞாயிறு, 8 மார்ச், 2009

சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது











சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது। நியூசிலாந்து சென்றுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. "டாஸ்" வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. மீதமுள்ள போட்டிகளில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனால் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (163), யுவராஜ் சிங் (87), கேப்டன் தோனி (68), சுரேஷ் ரெய்னா (38) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்" பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இது ஒருநாள் அரங்கில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த 2007ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது. தவிர நியூசிலாந்து மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இப்போட்டியில் சதம் கடந்த சச்சின் ஒருநாள் அரங்கில் அதிக சதம் (43வது) கடந்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை 425 போட்டிகளில் பங்கேற்ற இவர் 43 சதம், 91 அரைசதம் உட்பட 16684 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்னர் கடின இலங்கை விரட்டிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜெசி ரைடர் (105), பிரண்டன் மெக்கலம் (71), கைல் மில்ஸ் (54), டிம் சவுத்தி (32) ஓரளவு நம்பிக்கை தந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான், யுவராஜ், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 11ம் தேதி நடக்கிறது


























புதன், 4 மார்ச், 2009

இந்தியா, நியூஸீலாந்த் - மார்ச் - 3 - 2009













நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்து அணியை அபாரமாக தலைமையேற்று நடத்திய தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.டக்வொர்த் முறைப்படி 38 ஓவர்களில் 278 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நியூஸீலாந்து ஓவருக்கு 9.42 ரன்கள் தேவை என்ற நிலையில் 111/4 என்று இருந்த போது மீண்டும் மழை பெய்தது. ஆட்டம் துவங்கும் போது 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 216 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 42 பந்துகளில் சுமார் 112 ரன்களை அடிக்குமாறு டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூஸீலாந்து கடைசியில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.நியூஸீ. அணியில் குப்டில் மட்டுமே சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 5 பவுண்டரிஅக்ளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நியூஸீலாந்து பேட்ஸ்மென்களால் இன்று ஒரு சிக்சரைக் கூட அடிக்க முடியவில்லை.துவக்கத்தில் பிரவீண் குமார் தனது சாதுரியமான பந்து வீச்சினால் மெக்கல்லம், மற்றும் ரைடரை வீழ்த்தினார். மேலும் ஜாகீர் கான் ஒரு முனையில் இறுக்கினார். இதனால் ரன் எடுப்பது நியூஸீலாந்து அணிக்கு துவக்கம் முதலே பிரச்சனையாக இருந்தது.ஆனால் டெய்லரும், குப்டில் அடுத்த 8 ஓவர்களில் 58 ரன்களை விளாசினர். அப்போது 31 ரன்கள் எடுத்திருந்த டெய்லர், யூசுஃப் பத்தான் பந்தில் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.81/3 என்ற ஸ்கோரிலிருந்து கிராண்ட் எலியட்டும், குப்டிலும் ஸ்கோரை 111 ரன்களுக்கு உயர்த்திய போது எலியட் சேவாகின் அபாரமான த்ரோவிற்கு ரன் அவுட் ஆனார்.அப்போது மழை பிடிக்க துவங்கியது. மீண்டும் வந்த போது இமாலய இலக்கௌ நிர்ணயிக்கப்பட்டது.இதில் வரிசையாக 5 விக்கெட்டுகளை இழந்தனர் நியூஸீலாந்து வீரர்கள்.ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீண் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாகீர் கான், யுவ்ராஜ், யூசுஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.