சனி, 2 மே, 2009

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் , பஞ்சாப் அணி

கும்ளே அணி வெற்றி:
யுவராஜ் "ஹாட்ரிக்' வீண்

நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரை கலக்கலாக வீசிய பிரவீண் குமார் வெற்றிக்கு வித்திட்டார். பஞ்சாப் சார்பில் கேப்டன்யுவராஜின் "ஹாட்ரிக்' சாதனை, அதிரடி அரைசதம் வீணானது.தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

நேற்று இரவு டர்பனில் நடந்த 24வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சால ஞ்ர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பேட்டிங் தேர்வு செய்தார்.துவக்கம் மோசம்: பெங்களூரு அணி மோசமான துவக்கம் கண்டது. இர்பான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே ஜெசி ரைடர்(2) அவுட்டானார். யுவராஜ் அபாரம்: இதற்கு பின் யுவராஜ் அசத்தினார். 12வது ஓவரின் 5வது பந்தில் உத்தப்பாவை(19)வெளியேற்றினார். 6வது பந்தில் காலிஸ்(27) போல்டானார். இவரது அடுத்த ஓவரின்(14வது) முதல் பந்தில் அனுபவ பவுச்சர்(2) எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வாண்டர் மெர்வி 35 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

அதிரடி அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் யுவராஜ், கோயல் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். வழக்கம் போல சிக்சர் மழை பொழிந்த யுவராஜ் 50 ரன்களுக்கு(3 பவுண்டரி, 4 சிக்சர்) கும்ளே சுழலில் அவுட்டானார். கோயல் 20 ரன்கள் எடுத்தார். கேடிச்(3), ஜெயவர்தனா(19), சங்ககரா(17) அதிக நேரம் நீடிக்கவில்லை.6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. பிரவீண் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் இர்பான் பதான் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் ரன் இல்லை.நான்காவது பந்தில் இர்பான்(12) அவுட் டானார். ஐந்தாவது பந்தில் சாவ்லா(3)போல்டானார். 6வது பந்தில் ரன் எடுக்க இயலவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. புதிய கேப்டன் கும்ளே, பெங்களூரு அணிக்கு வெற்றிப் பாதையை காட்டியுள்ளார். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , மும்பை இந்தியன்ஸ்






ஐபிஎல் கிரிக்கெட்:
மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில், சச்சின் தெண்டுல்கர் 34 ரன்களும் ஹர்பஜன் சிங் 6 ரன்களும் எடுத்தனர். டூமினி 52 ரன்களுடனும் ஜாகீர்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹோட்கே 78 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு பலம் சேர்த்தார். எனினும், 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனக்டு இரண்டாவது வெற்றியை ஈட்டியது. தமிழக வீரர் பாலாஜி சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஸ்மித் 2 ரன்னில் (5 பந்து) ஆட்டம் இழந்ததும், சென்னை அணியின் உற்சாகம் ஆரம்பமானது. அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் சென்னை வீரர்கள் வீழ்த்திய வண்ணம் இருந்தனர். அந்த அணியின் அதிரடி மன்னன் யூசுப் பதான், சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்பட்டது. அவரை 20 ரன்களில் (13 பந்து, 3 பவுண்டரி) பாலாஜி வெளியேற்றினார். அவர் ஆட்டம் இழந்ததும் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிகட்டத்தில் சென்னை பவுலர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.முடிவில் 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 126 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் கம்ரன்கான் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 37 ரன்னும், குவீனி 28 ரன்னும் எடுத்தனர்.சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் பாலாஜி 4 விக்கெட்டுகளும், அல்பி மோர்கல், ஓரம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.